நடைபெற இருந்த நேர்முக பரீட்சை ஒத்திவைப்பு!

திருகோணமலை மாவட்டத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் பட்டதாரி பயிலுநர்களாகவும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சை நடைபெறவிருந்தது. இந்நிலையில் இன்றும் நாளையும்(24) நடைபெறவிருந்த இந்த நேர்முகப் பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. இத்தகவலை கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மூ.கோபாலரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.